Sunday 8 March 2015

SHARE  TRADING RULES ...(3)
SHARE இல் வணிகம் செய்ய விதிகள்...(3)

IN ENGLISH
( I DON'T KNOW FLUENT ENGLISH. If ANY MISTAKES ....SORRY FRIENDS..)

TRY TO TRADE YOUR OWN MONEY..(DON'T TRADE FRIENDS (MONEY) ACCOUNTS ,CLIENTS (MONEY) ACCOUNTS )..AND ALSO TRY TO TRADE WITH SURPLUS MONEY...


IN TAMIL


உங்களுடைய சொந்த பணத்தில் TRADE செய்ய முயற்சி செய்யுங்கள்.. அது உங்களின் உபரி பணமாக இருந்தால் இன்னும் நல்லது ...அது போல கடன் வாங்கியோ,நண்பர்களின் பணத்திலோ...நண்பர்களின் ACCOUNT இல் TRADE செய்யாதிர்கள்..

பங்கு சந்தை வணிகம் என்பது வெறும் வணிகம் மட்டும் இல்லை அது உளவியல் சம்பந்தபட்ட தொழிலும் கூட .ஆரம்பத்தில் நமது சொந்த பணத்தை கொண்டு TRADING கிற்கு வருகிறோம்..எந்த தொழிலும் ஆரம்பத்தில் இழப்பு வருவது இயல்பு தான். நாம் அந்த  இழப்பை சந்தித்தவுடன் அதோடு நின்று  நமக்கு இந்த தொழிலில் ஏன் இழப்பு வந்தது ?? அதை சரி செய்வது எப்படி என்றெல்லாம் யோசிப்பதில்லை..உடனடியாக அடுத்ததாக கடன்வாங்கி கொண்டு வந்து அதை இழந்து... திரும்பவும் கடன் வாங்கி  அந்த கடனுக்கு வட்டி கட்ட என்று ஒருகட்டத்தில் திரும்பி பார்த்தால் நாம் இழந்திருப்பது பல இலட்சங்கள் இருக்கும்..

இன்னும் ஒரு சிலரோ ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கடனும் வாங்க முடியாமல் தமது நண்பர்களுக்கு TRADE  செய்து தருகிறேன் என்று அவர்கள் ACCOUNT இலும் TRADE செய்து அதிலும் கடனாளி ஆகி நட்பை இழந்து,,பல இலட்சங்களுக்கு கடனாளி ஆகி ஒரு இராத்திரி கூட நிம்மதி யாக தூங்க கூட முடியாமல் தவித்து வருகின்றனர்...

இது  எப்படி உளவியல் ரீதியான தொழில்..????

முதலில் நமது பணத்தில் இழப்பை சந்திக்கும் போது,முதல் தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது,ஏனெனில் அது நமது பணம் அந்த பணத்திற்கு நாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை .அதன் பின் கடன் வாங்கி தொழில் செய்யும் போது ஆரம்பிக்கும் உளவியல் ரீதியான பிரச்னை..
இப்போது நமது ACCOUNT இல் உள்ள பணம் இன்னொருவரிடம் கடனாக வாங்கியது..இதை திருப்பி கொடுக்க வேண்டும் ..இந்த பணத்தை இழந்து விட்டால் அதற்கு வட்டி கட்டி ஆகவேண்டும்,..இந்த மனநிலையில் TRADING இல் உட்காரும் போது,நாம் வாங்கிய SHARE ஒரு சின்ன இறக்கத்தை சந்தித்தால் கூட நாம் பயந்து போய் இழப்பில் விற்று விடுவோம் அதன் பின் அந்த ஷேர் விலை ஏறும்..அந்த இழப்பை சரிகட்ட திரும்ப TRADING ..இப்படியாக போகும்..(எது வரை போகும் என்று உங்களுக்கே தெரியும்..ஆமாம் அடுத்ததாக கடன் வாங்கும் வரை போகும்...).

அது போல் தான் நண்பர்களின் ACCOUNT இல் TRADE செய்வது,CLIENT களின் ACCOUNT இல் TRADE செய்வது இதிலும் பல சிக்கல்கள் உள்ளன..இதற்கு என்னையே ஒரு உதாரணமாக சொல்லலாம்.சென்ற ஆண்டு TRADING மற்றும் TIPS கொடுத்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நண்பர் அறிமுகம் ஆனார்.இந்த நண்பருக்கு அன்றைய நிலையில் சந்தையில் இழந்திருந்தது 60 இலட்சங்கள்...TIPS வாங்குவதற்காக என்னிடம் வந்த அவர் மிகவும் நெருங்கிய நண்பராக மாறிவிட்டார்..அவரது இழப்பில் இருந்து மீட்க என்னை அவரது இன்னொரு நண்பரின் ACCOUNT இல் 15 இலட்சம் பணம் இருக்கிறது அதை நீங்கள் TRADE  செய்து எனக்கு பணம் சம்பாதித்து எனக்கு கடனை அடைக்க உதவுங்கள் என்று கேட்டார்...

எனக்கு அதில் உடன்பாடு  இல்லை..என்று தெரிவித்து விட்டேன் ஆனாலும் அவர் விடவில்லை..அந்த ACCOUNT இல் இழப்பு வந்தாலும் பரவாயில்லை..நீங்கள் இழப்பில் பொறுபெடுத்து கொள்ள வேண்டாம் ...இலாபம் வந்தால்  அதில் 30%தருகிறேன் என்றெல்லாம் சொல்லி பார்த்தார் ..அப்படியும் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்..அன்றைய சூழலில் அவருக்கு இருந்த ஒரே எண்ணம் அன்றைய என்னுடைய ACCOUNT இல் அப்போது இருந்த முதலீடு 110000 இந்த பணத்தை வைத்து வாராவாரம் 12000-15000 வரை சம்பாதித்து கொண்டிருந்தேன். 1லட்சத்தை வைத்து 15000 சம்பாதிக்கிறார் 15இலட்சம் கொடுத்தால் வாரம் 2 இலட்சம்  சம்பாதிப்பார் தனது மொத்த கடனையும் சீக்கிரம் அடைத்து விடலாம் என்பது அவரது எண்ணம்..

ஒரு கட்டத்தில் அந்த நண்பருக்கு உதவுவதற்காக நானும் சரி என்று ஒப்புக்கொண்டு ACCOUNT ஐ பொறுப்பெடுத்து கொண்டேன்..இலாபம் வருவதை நீங்களே எடுத்து கொள்ளுங்கள்..இழப்பு வந்தாலும் என்னிடம் கேட்காதிர்கள் என்று  கூறி தான் ஒப்புக்கொண்டேன்.அந்த  ACCOUNT  5இலட்சம் ரூபாயுடன் முதல் 2 நாட்கள் TRADING நன்றாக தான் போனது, 14000 வரை இலாபத்தில் இருந்தது.மூன்றாம்  நாள் TRADING ஒரு சிறு தவறு..ACCOUNT இல் 30000 ஒரே நேரத்தில் இழக்க நேர்ந்தது..ACCOUNT -16000 திற்கு வந்தது அந்த நண்பர் ஏன் சார் பார்த்து பண்ணி இருக்கலாமே என்று கேட்டார்..முதன் முதலில் பயம் வந்தது ..இன்னொருவரின் ACCOUNT அவருக்கு பதில் சொல்ல வேண்டுமே ??என்ற பயம்...???

அந்த -16000ஐ எடுக்க வேண்டி அவசர அவசரமாக TRADING ..மாற்றி மாற்றி SL TRIGGER என அடுத்த அடுத்த நாட்களிலும் தொடர்ந்து இழப்புகள் இழப்பு ஒரு இலட்சம் வரை சென்றது ..அன்றோடு TRADING ஐ நிறுத்தினேன் ACCOUNT ஐ அவரிடமே திரும்ப கொடுத்தேன்..இழப்பு ரூபாயை அவர் திரும்ப கேட்கவில்லை இருப்பினும் இலாபம் வந்தால் அவர் தருவதாக சொன்ன 30% ஐ நான் இழப்பிலும் 30% கணக்கிட்டு திரும்ப கொடுத்தேன் என்னுடைய சொந்த பணத்தில் இருந்து....அதன் பின் ஒரு சில நாட்கள் என்னுடைய ACCOUNT இலும் சின்ன சின்ன இழப்புகள் (முந்தைய  இழப்பின் பாதிப்பு மனநிலையில் தொடர்ந்து இருந்து வந்தது...).ஒரு 10 நாட்கள் TRADING ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்து விட்டு அதன் பின் சாதாரண மனநிலைக்கு வந்த பின் எனது ACCOUNT இல் TRADING செய்து எனது இழப்பை ஈடு கட்டினேன்...

ஏன் ?? ஏன் ???? இந்த இழப்பு?? 80-85 மிக சரியாக TRADING செய்து கொண்டு இருந்த நான் ..இன்னொருவரின் ACCOUNT இல் TRADE செய்யும் போது தோற்றது ஏன்??? ஒரே காரணம் பயம்...பயம் மட்டுமே...என்னுடைய ACCOUNT இல் உள்ள பணம் என்னுடைய பணம் ..இந்த பணத்திற்கு நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை ..அதனால் நான் TRADING செய்யும் போது சின்ன (-) இழப்பு வந்தாலும் SL போடாமல் காத்திருந்து இலாபத்தில் வெளியே வருவேன்..அதுவே இன்னொருவரின் ACCOUNT என்றால் அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும் ..அதனால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டி முக்கியமான நேரங்களில் TRADING செய்யாமலும்,இழப்பை சரிகட்ட .,இழப்பை சரிகட்ட என்று தவறாக TRADING செய்து மேலும் இழப்பை மட்டுமே சந்தித்தேன்...

அன்றையிலிருந்து இன்று வரை  TRADE  செய்து கொடுக்க சொல்லிகேட்கும் ...எல்லோருக்கும் ஒரே பதில் தான் "மன்னித்துவிடுங்கள் என்னால் முடியாது..."

கடன் வாங்கி அல்லது  ,பிறருக்கு பதில் சொல்லும் சூழ்நிலையில் இருந்து TRADING செய்து பணம் சம்பாதித்ததாக  ஒருவரை ,ஒரே ஒருவரை கூட பார்க்க முடியாது...

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ,,ஏன் நமது சொந்த பணத்தில் TRADE செய்ய வேண்டும் என்று...???


இந்த தொழிலில் பணம் சம்பாதிக்க யாரோ ஒருவரால் முடிகிறது ..நம்மால் முடியாதா ???? முடியும் ....நம்புங்கள் ..

நம்மாலும் முடியும்....



No comments:

Post a Comment