Tuesday, 17 November 2015

Nifty Future Fancy Numbers..



Hai Friends,
As A Diwali Gift And Going to Tell About Here Simple Trading Secrets..Use This Tricks And Share To Your Friends...

FANCY NUMBER TRICKS ...
That is In Nifty 20-80 (+-7 Points) is a big Support And Resistance..
Wherever Nifty Goes (2500,6000,12300,7800,8300)
(2520,2580,6020,6080,12320,12380,7820,7880,8320,8380))(8313-8320-8327------8373-8380--8387)
Last Two Numbers (20-80)Give a Big Support and resistance So Trade Carefully...@ this Place..





In Tamil...

வணக்கம் எனது பங்குசந்தையில் TRADING செய்து வரும் FB நண்பர்களுக்கு தீபாவளி பரிசாக ஒரு சின்ன TRADING METHOD கற்று தர போகிறேன்..
FANCY NUMBER TRICKS ...
NIFTY FUTURE 
இல் TRADE செய்யும் அனைவருக்கும் இந்த TRICK உதவும்..
உங்கள் நண்பர்களும் பயன் பெற இதை அவர்களுக்கு SHARE செய்யவும்...
NIFTY FUTURE 
 பொறுத்த வரை 20-80 (+ OR - 7 POINTS ) என்ற இரண்டு 
LEVEL கள் பெரிய SUPPORT செய்யும்...

NIFTY FUTURE 2500 
இல் TRADE ஆனாலும் 6100 இல் TRADE ஆனாலும் 10500 இல் TRADE ஆனாலும் .. 7500 இல் TRADE ஆனாலும்...சரி 20-80 அதாவது ..2520,2580,6120,6180,10520,10580,7520,7580 இந்த 2 (கடைசி இரண்டு NUMBER களும் மிக பெரிய SUPPORT மற்றும் RESISTANCE ஆக  செயல்படும்..இதற்கு நீங்கள் எந்த CHART ஐயும் பார்க்க வேண்டியதில்லை...NIFTY மேலே செல்லும் போது EXAMPLE 8280 ,8320(+-7 POINTS ) வரும் போது கொஞ்சம் மேலே போக தடுமாறும்...அது போல கிழே வரும் போதும்   EXAMPLE 8180.8120(+-7 POINTS )அருகே வரும் போது அதற்கு கீழே இறங்க கொஞ்சம் தயங்கும்...இந்த இரண்டு LEVEL களும் பெரிய SUPPORTRESISTANCE ஆக செயல்படும் ....இந்த இடங்களில் கொஞ்சம்  கவனமாக இருந்தால் உங்கள் இலாபம் இன்னும் அதிகபடலாம் ..
இங்கே உதாரணமாக Nifty Future கடந்த 2 மாதங்களாக TRADE ஆன விலைகள் இங்கே. உங்கள் பார்வைக்கு
தோழமையுடன்
Zformula Ravi

களும் மிக பெரிய SUPPORT மற்றும் RESISTANCE ஆக செயல்படும்..இதற்கு நீங்கள் எந்த CHART ஐயும் பார்க்க வேண்டியதில்லை...NIFTY மேலே செல்லும் போது EXAMPLE 8280 ,8320(+-7 POINTS ) வரும் போது கொஞ்சம் மேலே போக தடுமாறும்...அது போல கிழே வரும் போதும் EXAMPLE 8180.8120(+-7 POINTS )அருகே வரும் போது அதற்கு கீழே இறங்க கொஞ்சம் தயங்கும்...இந்த இரண்டு LEVEL களும் பெரிய SUPPORT RESISTANCE ஆக செயல்படும் ....இந்த இடங்களில் கொஞ்சம் கவனமாக இருந்தால் உங்கள் இலாபம் இன்னும் அதிகபடலாம் ..
இங்கே உதாரணமாக Nifty Future கடந்த 2 மாதங்களாக TRADE ஆன விலைகள் இங்கே. உங்கள் பார்வைக்கு

தோழமையுடன்
Zformula Ravi


Thursday, 22 October 2015

NSE FUTURE இல் LOT SIZE அதிக படுத்தபட போகிறது

NSE FUTURE இல் LOT SIZE  அதிக படுத்தபட போகிறது ..இது RETAIL TRADER க்கு நல்லதா கெட்டதா ???

NSE இல் வரும் நவம்பர் முதல் எல்லா LOT SIZE களும் அதிகபடுத்த படுகிறது ..என்னை பொறுத்த வரை இது RETAIL TRADER களுக்கு மிகவும் பாதிப்பான ஒரு விஷயம்..எப்படியெனில்.


இதுவரை 50000 ரூபாய் இருந்தால் ஒரு FUTURE LOT LONG அல்லது SHORT எடுத்து POSITIONAL வைத்து வணிகம் செய்து வந்த வணிகர்கள் இனி 125000 அல்லது 150000 இருந்தால் மட்டுமே FUTURE இல் POSITION  வைக்க முடியும்.. FUTURE இல் TRADE செய்த எவரும் திரும்ப EQUITY யில் TRADE செய்ய விரும்ப மாட்டார்கள் இனி அவர்கள் கவனம் OPTION பக்கம் திரும்பும்...CALL PUT OPTION களை இருக்கும் பணத்திற்கு தகுந்தார் போல வாங்கி வைப்பார்கள்..


(உதாரணமாக NIFTY ஒரு LOT(25) 20000 MARGIN கொண்டு  TRADE செய்த நபர் இனி ஒரு LOT (75) TRADE செய்ய 60000 வேண்டும்.. அவர் மேற்கொண்டு கடன் வாங்கி  இந்த வணிகத்திற்கு வர போவதில்லை ..இனி அவர் செய்வது இருக்கும் 20000 ரூபாய்க்கு NIFTY CALL  அல்லது PUT OPTION  வாங்கி வைத்து TRADE செய்ய முயற்சி செய்வார் .)



இங்கே OPTION TRADING இல் என்ன நடக்கிறது என்பது OPTION இல் TRADE செய்யும் எல்லோருக்கும் தெரியும்..

முழுக்க முழுக்க OPTION MELTING மட்டுமே பெரும்பாலும் நடக்கிறது..
இங்கே புதிதாக வரபோகும் அந்த நண்பர்களின் பணம் கண்ணெதிரே கரைய போகிறது..

இது என்னுடைய கருத்து மட்டுமே..

கவனமாக TRADE செய்யுங்கள்...


From November Onwards NSE is Going to Increase The Futures and Options Lot Size.

For Retail Trader This is Good News??? Or Bad News???

In my view This is The Bad News For Retail Traders.

Because,

Nowadays in Nifty You can Buy One Lot(25) In 20000 Rupees For Positional Trade ..
After November You can Buy or Sell One lot(75) In 60000 Rupees..
(Lot size And Margin Money are Going To Increase for All The Futures)
Many of the person can think The Lot size is Going To increase is the Good news.
But The reality is This Good news Only for The Big Traders...

Many of the Retail Traders are Having Below 30000 to 50000 as Their Capital..

After November This Retail Traders Can not able To Trade Futures..
So They Change Their Trades in Option Side.
But you can Know What is Happening in Option Trade..Maximum Options are In Melting..
Now Maximum of the Retail Traders Will Buy The Options As they Do in the Future Trades...
Like Option Melting Their Capital Also Going to Melt.
This is Only My View... Trade Carefully..


Friday, 2 October 2015

கவனமாக இருங்கள் FACEBOOK அனலிஸ்ட்களிடம்...
நீண்ட நாளைக்கு பின் இந்த பதிவை எழுதுகிறேன்...

நேற்று மதியம் ஒரு புதிய  நண்பர் தொலைபேசியில் பேசி கொண்டிருந்தார்...
அவர் பேசிய விஷயம்... 6 மாதத்திற்கு  முன் பங்கு சந்தைக்கு வந்த அவர் FB இல் பங்குசந்தை பற்றி CALLS அப்டேட் செய்துவரும் நண்பர்கள் பலருடன் நட்பு வைத்துள்ளார்..

ஒருவர் சொல்லுவது சில நேரங்களில் சரியாக இருக்கிறது ..அதை நம்பி நாம் TRADING இல் இறங்கினால் நமக்கு நட்டம் வருகிறது...என்று கூறினார்.
அதில் பலரையும் FOLLOW செய்து 2.30 இலட்சம் ரூபாய் இழந்து விட்டதாகவும்,கூறி வருத்தப்பட்டார் ..
அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவு,அவர் போல் ஏமாந்து கொண்டிருக்கும் பலருக்காகவும் இந்த பதிவு...

FB இங்கே நிறைய வகையான அனலிஸ்ட் கள் உண்டு..அவர்களில் சிலவகை அனலிஸ்ட் கள் பற்றி மட்டும் சுருக்கமாக இங்கே...

1.ஜோதிடரா இல்லை அனலிஸ்ட் ஆ ???

FB அனலிஸ்ட் களில் மிக முக்கியமான முதல் வகை..இவர்கள் குறி (ஆய்வினை ) சொல்லும் விதம் வித்தியசமாக இருக்கும் ..அதாவது TARGET சொல்லுவது உதாரணமாக NIFTY தற்போது 7950 இல் உள்ளது இவர்கள் (BULL SIDE ஆக இருந்தால் )சொல்லும் டார்கெட் 8100 ஆக இருக்கும் SL ஏதும் சொல்ல மாட்டார்கள் ...     BEAR SIDE ஆக இருந்தால் 7800 ஆக இருக்கும் ,,

8100 போகும் என்று சொன்ன நபர்கள் NIFTY 7950 இல் இருந்து 7700 வரும் அப்போது ONLINE இல் இருக்க மாட்டார்கள் ..திரும்ப 7950 வரும் போது வேறு சில பதிவுகள் கொடுத்து கொண்டு இருப்பார்கள் ..8100 வந்தவுடன் நான் சொன்னது நடந்துவிட்டது..மார்க்கெட் 8100 என்று பெருமிதம் கொள்வார்கள்...(250 புள்ளிகள் இறங்கி விட்டு 250 புள்ளிகள் திரும்ப ஏறி அதன் பின் 150புள்ளிகள் ஏறி இருக்கிறது ... )

இதில் என்ன ஆய்வு இருக்கிறது ? ..
7950 இல் இருக்கும் NIFTY இவர் 8100 போகும் என்று சொல்லும் போது ஒரு 50 புள்ளிகள் இறங்கி திரும்ப 150 புள்ளிகள் மேலே போனால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது...
50 POINT DOWN  150 POINT UP  ..
250 POINT DOWN 150 POINT UP ...
இதில் எது அனலிஸ்ட் சொன்னது எது கற்பனை வாதிகள் சொன்னது என்பதை கவனித்து கொள்ளலாம்..

2 ..ONE SIDE அனலிஸ்ட் ..

இந்த வகை அனலிஸ்ட் கள் மார்க்கெட் ஆரம்பித்தவுடன்..NIFTY BUY TARGET 50 POINT SL 40 POINT என அப்டேட் செய்வார்கள் (BUY  @ 7950 SL 7915 TARGET 7980) இதே போல் SELLING SIDE உம்
இவர்கள் கணக்கீடு மிக எளிதான வகை ..நிபிட்டி எப்படியும் 50-70 POINT ஒருநாள் TRADE ஆகும் ..மாதம் 20 TRADING நாளில் 10 நாள் இந்த மாதிரி TRADE கள் SUCCESS ஆகும்..அப்போது TARGET REACHED என்று COMMENT போடுவார்கள்... ஒரு 10 நாள் FAILURE ஆகும் அப்போது அந்த CALL கொடுத்து பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள்...
பெரும்பாலும் இவர்கள் BUY SIDE மட்டுமோ  SELL SIDE மட்டுமோ தான் இருப்பார்கள்...

3... LINE  ANALYST

இந்த வகை அனலிஸ்ட் கள் ஏதாவது CHART இல் கோடுகள் வரைந்து UPDATE கொண்டே இருப்பார்கள் என்ன கோடுகள் எதற்கு இத்தனை கோடுகள் ?இது எதையுமே புரிந்து கொள்ள நம்மால் (அவர்களாலும்)தான்  முடியாது...

இவர்களும் மேலே 1,2 வது POINT களில் சொன்னது போல ஒரு விஷயம் நடக்கும் போது மட்டும் நான் சொன்னது நடந்து விட்டது என்று கருத்து சொல்வார்கள்.....

4.... MARKET VIEW ANALYST

A . BEFORE MARKET OPENING
இந்த வகை அனலிஸ்ட் கள் காலையில் மார்க்கெட் ஆரம்பிக்கும் முன்பு NIFTY மற்றும் சில STOCK களின் PIVOT களை UPDATE செய்வார்கள் ..இவர்கள் சொன்ன PIVOT புள்ளிக்கு இந்த STOCK வரும் போது ...ஆகா நாம சொன்னது நடந்து விட்டது ..என்று பெருமிதம் கொள்வார்கள்..

B . AFTER MARKET OPENING

இந்த வகை அனலிஸ்ட் கள் காலையில் MARKET ஆரம்பித்த பின் அதன் ONE HOUR CANDLE களை கணக்கிட்டு சில VIEW களை சொல்வார்கள் ..(நாங்கள் இந்த வகை தான் எங்களது வெற்றிய 85% மட்டும் தான்  15% நாங்களும் தோற்க தான் செய்கிறோம். )இ ங்கே இவர்களது கணக்கீடும் சில சமயம் பொய்யாகும் ..அப்போது அமைதியாக இருப்பார்கள்..இவர்கள் சொன்னது நடந்தவுடன் ஆகா நான் சொன்னது நடந்து விட்டது என்று தலைகிழாக நிற்பார்கள்(நாங்களும் தான் )...

5.... TRADE BOOK  அனலிஸ்ட்

இந்த வகை அனலிஸ்ட் கள் மாதத்தில் 6-7 நாட்கள் TRADE BOOK UPDATE செய்வார்கள் ..நாங்கள் இன்று சம்பாதித்தோம் என்று 4000  ரூபாய் இலாபத்திற்கு  எல்லாம் TRADE BOOK அப்டேட் செய்வார்கள்...ஆனால் 13 நாள் எந்த BOOK உம் அப்டேட் செய்ய மாட்டார்கள் ..எளிதாக புரிந்து கொள்ளலாம் அந்த நாட்களில் என்ன நடந்திருக்கும் என்று...

இவ்வாறு இன்னும் பல வகை அனலிஸ்ட் கள் இங்கே இருகின்றனர் ....கவனமாக இருங்கள்..உங்கள் பணதிற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு...

கடந்த இரண்டு மாதங்களாக சந்தை பற்றி கட்டுரை ஏதும் எழுத வில்லை..ஒரு சகோதரர் என்ன சார் நீங்க எழுதி ரொம்ப நாளாச்சு சார்  என்று கேட்டு கொண்டே இருந்தார்...அவருக்கும் பதில்  இங்கே..

இரண்டு மாதங்களுக்கு  முன் WHATS UP இல் எனக்கு ஒரு MESSAGE வந்தது..அதில் JUNE 6 ஆம்  தேதி எனது BLOG இல் நான் எழுதிய  OPTION HEADGING பற்றிய ஒரு கட்டுரை .... அதில் இருந்த எனது பெயரை எல்லாம் நீக்கி விட்டு வேறொரு பெயர் சேர்க்க பட்டு  அவர்கள் அலுவலகதிற்கு சென்றால் இது போன்ற முறைப்படி கற்று கொள்ளலாம் ..இலாபம் சம்பாதிக்கலாம் ..என்று PHONE நம்பருடன் ஒரு விளம்பரம்....

நான் எழுதிய கட்டுரையை COPY செய்து பெயர்களை திருத்தம் செய்து அதை எனக்கே அனுப்பிய அவர்களிடம் வகுப்பிற்க்கு வர சொன்ன புத்திசாலியிடம் போன் செய்து சொன்னேன்/. இது எனது கட்டுரை என்று..அவர் சொன்னார்  இது அவருக்கு WHATS UP இல் யாரோ அனுப்பியதாகவும் அதில் உங்கள் பெயர் இல்லை என்றும் வேறொரு பெயர் இருந்தது என்றும்....கட்டுரை நன்றாக இருந்ததால் அந்த பெயரை நீக்கி விட்டு அவர் பெயர் பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதிற்கும் பரப்பியதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்டார்..

எனக்கு தெரிந்து 2 பேர் இன்னும் இது போல எத்தனை பெயர் மாற்றம் செய்து ஏமாற்றி கொண்டு இருகிறார்களோ..??

எனது எழுத்துகளை இங்கே TRADER கள்  பயன்படுத்தி கொள்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை >>.ஆனால் அது திருடர்களுக்கு  துணை போவது போல உணர்ந்ததால் எழுதுவதை குறைத்து கொண்டேன்..

நேற்று என்னுடன் பேசிய சகோதரர் சந்தைக்கு புதியவர்..FB இல் உள்ள சில அனலிஸ்ட்களை (?????)  நம்பி நாமும் இந்த தொழிலுக்கு வருவோம் ஏற்ற ஆவலுடன் வந்து 3 இலட்சம் ரூபாய் முதலீட்டை 5 மாதத்தில் 35000 ரூபாயாக மாற்றி இருக்கிறார்..
இன்னமும் அந்த 35000 கொண்டு 3 இலட்சத்தை எடுத்து விடலாம் என்று இன்னொரு FB சொன்னதை நம்பி முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்...அவருக்காகவும் இவரை போன்ற புதியவர்களுக்காகவும் இந்த கட்டுரை (அமைதியாக இருக்க மனசாட்சி ஏற்று கொள்ளவில்லை..இவர்களுக்காக இந்த கட்டுரை எழுதினேன். )...

இங்கே FB இல் இருக்கும் எந்த அனலிஸ்ட் களும் உங்களின் இழப்பிற்கு  பொறுப்பு ஏற்க போவதில்லை ...உங்கள் பணத்திற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு ..நீங்கள் இங்கே இழக்கும் பணத்திற்கு நீங்களும் உங்கள் மனைவியும் உங்கள்  குழந்தைகளுமே துன்பத்தை அனுபவிக்க போகிறிர்கள்..

எவரையும்  (எங்களையுமே ) நம்பாதீர்கள்..

நீங்கள் கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள் ...யாரிடமும் போய் கற்று கொள்ள வேண்டாம் சந்தையில் அமைதியாக ஒரு 6 மாதம் WATCH செய்தாலே போதும் (TRADE செய்ய கூடாது )உங்களுக்கு சந்தை பற்றிய புரிதல் ஏற்படும் ..அந்த அனுபவத்தினை சில மாதங்கள் பயிற்சி செய்யுங்கள் ..அது இலாபம் செய்யும் வழியை உங்களுக்கு கட்டும் ..

3 வருடம் COMMERCE (B .COM )படித்தால் தான் ஒரு அலுவலகத்தில் கணக்கு எழுதும் வேலை மாதம் 15000 ரூபாய் சம்பளத்திற்கு கிடைக்கும் .ஆனால் இங்கே இந்த சந்தைக்கு வந்து 2 நாளில் கோடிஸ்வர கனவுடன் TRADE செய்ய தொடங்குகிறோம் ..இருப்பதை இழந்து விட்டு இது சூதாட்டம் என்று புலம்புகிறோம்..சூதாட்டம் ஆகவே இருக்கட்டுமே அந்த ஆட்டதில் கூட ஒருவன் இழப்பதை இன்னொருவன் பெறுகிறான்...நீங்கள் ஏன் பெறுபவனாக இருக்க முயற்சி செய்ய கூடாது..???

அனலிஸ்ட் கள் வெற்றியை தரபோவதில்லை ,
உங்களுக்கு TIPS கொடுப்பவர் வெற்றியை தரப்பவதில்லை
பயிற்சி வகுப்புகள் வெற்றியை தராது ..

பயிற்சி மட்டுமே வெற்றியை தரும் ...
பயிற்சி செய்யுங்கள்
அதன் பின் TRADE செய்ய வாருங்கள் ..
வெற்றி உங்களுக்கே...

தோழமையுடன்
Zformula Ravi...

Saturday, 8 August 2015

மதுரை கலந்துரையாடல் வகுப்பு..

உயர்திரு : MR.GANASKANTHAN  அவர்கள்,  MADURAI COMMODITY TRADERS AND WELFARE ASSOCIATION..  இன் நிறுவனர்.. உயர்திரு RAM CHANDRASEKAR  அவர்கள் இந்த ASSOCIATION  இன் துணை தலைவர்... 

இன்று நான் சந்தித்த மிக அற்புதமான மனிதர்கள் ..இவர்களை பற்றி நான் இங்கு குறிப்பிட காரணம்இங்கே விளக்கமாக ..

இவர்கள் இந்த ASSOCIATION துவங்கியது  TRADER ஆக ONLINE தொழிலுக்கு வரும் இந்த மதுரை பகுதியை சேர்ந்த நண்பர்கள், தொழிலை கற்று கொள்ளவேண்டும்என்பதற்காக ,அனைவரும் கலந்து கொண்டு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக,புதிதாக வரும் அனைவரும் தொழில்  கற்று கொள்ள வேண்டும் என்பதற்காக, ,அவர்களையும் கைபிடித்து அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக,   

மதுரையின் மைய பகுதியில் 14000 ரூபாய் (மின்கட்டணம் சேர்த்து ) வாடகையில் ஒரு பெரிய TRADING அறை உருவாக்கி உள்ளனர் ..
இந்த அறையின் வாடகை முழுவதும் இந்த நிறுவனர் தமது சொந்த பணத்தில் செலுத்தி வருகின்றார் ..இங்கே தினசரி 10 நண்பர்கள் வரை வந்து அவர்கள் LAPTOP கொண்டு வந்து வைத்து கொண்டு தங்களுக்குள் கலந்துரையாடி,TRADING முடிவுகளை எடுத்து இலாபம் ஈட்டி வருகின்றனர் ...

இந்த அறையின் வாடகை செலவுக்காக இங்கு வரும் நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சம் பணம் செலுத்தி வாடகையை பகிர்ந்து கொள்வோம் என்று சொன்ன பொது இதன் நிறுவனர் உயர் திரு MR.GANASKANTHAN அவர்கள் பணம் பெற்று கொள்ள மறுத்து விட்டார் ,,
இதுவும் போக இவர்கள் செய்யும் மிக பெரிய ஒரு காரியம்,மார்க்கெட் இல்லாத நாட்களில் சனி ஞாயிறு களில் ஒன்றாக சந்தித்து சந்தை பற்றி தங்களுக்குள் ஒன்றாக விவாதிக்கின்றனர் ,மேலும் இந்த சந்தை பற்றி ஓரளவு விழிப்புணர்வு தரக்கூடிய நண்பர்களை தமிழகம் முழுவதிலிருந்தும் வரவைத்து ,அவர்களுக்கு தங்கும் வசதி செய்து தந்து (நிறுவனரின் சொந்த செலவில் ) இங்கே ASSOCIATION இல் விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் நடத்துகின்றனர்..இங்கு இதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தனியே கட்டணம் ஏதும்  வசுலிப்பதில்லை ,,அவர்களின் ஒரே நோக்கம் TRADER கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும் என்பது மட்டும் தான் ..

இங்கே ஒவ்வொரு வாரமும்  15-20 நண்பர்கள் வாரவாரம் வருகின்றனர்..தினசரி TRADE செய்ய ஒரு 10 நண்பர்கள் வருகின்றனர்..TRADING பற்றிய போதிய விழிப்புணர்வையும் பெற்று வருகின்றனர் ..

இப்போது சொல்லுங்கள் இந்த சேவை செய்து வரும் இவர்கள் அற்புதமான மனிதர்கள் தானே ..

இந்த வார நண்பர்களின் சந்திப்பின் போது என்னை வந்து உரையாற்றும்படி இங்கு உறுப்பினராக உள்ள நண்பர் மதுரை ராஜா அவர்கள் என்னிடம் கேட்டார் ..25-30 பேர் வரக்கூடிய இடத்தில் அவர்கள் முன் பேசும் அளவிற்கு எனக்கு முழுமையாக பேச தெரியாது என்பதால் தவிர்க்க  முயற்சி செய்தேன் ..
அந்த ASSOCIATION பற்றி அது எதற்காக செயல்படுகிறது என்பது பற்றியும்,நண்பர் மதுரை ராஜா கூறியவுடன் நான் ஒப்புக்கொண்டேன் ,இன்று அந்த கலந்துரையாடல் நிகழ்வு அங்கு நடந்தது ..நிறைய நண்பர்கள் வந்திருந்தனர் ..எல்லோரும் மிக அமைதியாக முழு ஒத்துழைப்பு தந்தனர் ..நிறைய என்னுடைய FB நண்பர்களும் வந்திருந்தனர் ..

  எனக்கு இது முதல் சந்திப்பு ஒரு 25-30 பேர் முன்னிலையில் பேசுவது முதன் முறை ..இந்த பதட்டத்தின் காரணமாக நான் பேச வந்த OPTION பற்றிய SUBJET குறைவாகவும் சந்தை விழிப்புணர்வு பற்றிய பேச்சு அதிகமாகவும் இருந்தது  ..ஒரு சில நண்பர்களுக்கு (OPTION பற்றி எதிர்பார்ப்புடன் வந்த)இந்த சந்திப்பு கொஞ்சம் ஏமாற்றத்துடன் முடிந்திருக்கும் என்று எண்ணுகிறேன் .. 
எனவே மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தால் OCTOBER மாதம் இந்த ASSOCIATION க்கு  மீண்டும் உங்களை சந்திக்க வருகிறேன் .,,.அப்போது இன்னும் OPTION பற்றி மீண்டும் உரையாடலாம் நண்பர்களே ,

மதுரை பகுதியை சேர்ந்த TRADER கள் இந்த ASSOCIATION ஐ முழுமையாக பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்கிறேன் ..உங்கள் சந்தை அறிவை வளர்த்து கொள்ள இந்த ASSOCIATION உங்களுக்கு உதவும்.ASSOCIATION நண்பர்களின் தொடர்பு எண்கள் (98425 85593-7200077622)

இதே போன்று  பிறருக்கு உதவவேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட மனிதர்கள் கிடைப்பது மிக கடினம் ..இப்படி ஒரு சிலர் எல்லா மாவட்டத்திலும் கிடைத்து விட்டால் அது அந்த மாவட்டத்திலுள்ள TRADER களுக்கு மிகப்பெரிய வரபபிரசாதம் .. மதுரை பகுதி TRADER கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள் தான் ... ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஒரு 10 நண்பர்கள் தலைக்கு 1000 ரூபாய் செலுத்தி ஒரு 10000 ரூபாய் மாத வாடகையில் ஒரு அறை அமைத்து ஒன்றிணைந்து TRADE செய்ய ,இது போல்  செய்தால் முதலில் கொஞ்சம்  சிரமம்  இருந்தாலும் நாளடைவில் ஒரு 30 உறுப்பினர்கள் வரை ஒன்றிணைந்து TRADE செய்ய துவங்கும் போது ..செலவுகள் பகிர்ந்து கொள்ள படும் ..ஒரு நபருக்கு ஒரு 500 ரூபாய் மாதம்

வரை செலவுகள் வரலாம்.ஆனால் இது போன்ற  முயற்சி  பல இலட்ச ரூபாய் TRADING இழப்பை தடுக்கும் ..பல இலட்சம் கொடுத்து கற்று கொள்ள நினைக்கும் MARKET அறிவையும் 500-1000 ரூபாயில் வளர்க்கும் ..உங்கள் மாவட்டத்தில் முயற்சி செய்யுங்கள் நண்பர்களே..

இந்த பங்கு  சந்தையிலும் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பது இன்று நான் சந்தித்த  அந்த ASSOCIATION நிறுவனர்,துணை தலைவர் மூலம் உணர்ந்து கொண்டேன்..

அவர்களுக்கு அவர்களின் பணிக்கு என் மனம் நிறைந்த  நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்..

தோழமையுடன் 
ZFORMULA RAVI ..
           

Friday, 24 July 2015

பங்கு சந்தை பயிற்சி வகுப்பு தேவையா ???

இந்த பதிவு பொதுவாக TRADER களிடையே  விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக எழுதப்படும் பதிவு ..இங்கு பயிற்சி வகுப்பு எடுப்பவர்களை பற்றி மிக விரிவாக எழுதினால் அது எனக்கு சாதகமாக நான் எழுதுவதாகவே இருக்கும் ..ஏனென்றால் நான் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறேன்..
எனவே என்னால் முடிந்த அளவு நடுநிலையோடு எழுதி  இருக்கிறேன்  ..ஒருவேளை இது TRAINER கள் சார்பாக இருந்தால் என்னை மன்னிக்கவும்..
உங்களின் மேலான கருத்துகளை கண்டிப்பாக பதிவிடவும்...

ஒரு மளிகை கடை வைக்கவேண்டும் என்றால் கூட ஒரு  வருடம் எங்காவது மளிகை கடையில் வேலை பார்த்தால் மட்டும் தான் கடை நடத்த முடியும்..
அது போல
பயிற்சி என்பது எதுவும் தெரியாமல் ஒரு தொழிலை ஆரம்பிப்பதை விட கொஞ்சம் தெரிந்து கொண்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கலாமே என்று நினைபவர்களுக்கு பயிற்சி உதவும்.. ஆனால் இங்கே பங்கு சந்தையில் (மற்றும் FB )இல் 100 க்கு 200 பயிற்சியாளர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பது தான் அடிப்படை பிரச்சனை ..ஒவ்வொரு பயிற்சி வகுப்பிற்கும் சென்று பணத்தை இழந்து ஏமாந்து மனம் நொந்து போனவர்கள் தான் அதிகம் ..

நானும் முன்பு 2007 இல்  3000 ரூபாய் ,900 ரூபாய் செலுத்தி 2 பயிற்சி வகுப்பிற்கு சென்றவன் தான்..அன்று நான் கற்று கொண்ட விஷயம் சிறியது என்றால் கூட இன்று அது எனக்கு பயன்படுகிறது..

பயிற்சி வகுப்பிற்கு சென்று பணத்தை வீணாக்குவதை விட சிலர் அனுபவத்தில் கற்று கொள்ளலாம் என்று சொல்லுவார்கள்..(நானும் கூட இந்த வகையை  சேர்ந்தவன் தான் )..

அனுபவம் மிக பெரிய ஆசான் . உண்மையான வார்த்தைகள் ..
ஆனாலும் அதிலும் சிக்கல்கள் உள்ளது ..

சென்ற வாரம் ஒரு சில நண்பர்களுக்கு  பயிற்சி அளிக்கும் போது  எனக்கு தோன்றியது  ஒன்றே ஓன்று தான் ..

இதே போல் இந்த பங்கு சந்தையின் பள்ளங்களை (இங்கு பள்ளங்கள் தான் அதிகம் ) அன்று யாரோ எனக்கு கற்று தந்திருந்தால்,அன்றே நான் சிறிய இழப்பின் போதே இந்த சந்தையை விட்டு  விலகி ஓடி இருப்பேன்.

அல்லது இந்த பங்கு சந்தை வெற்றி நுணுக்கங்களை,எவரேனும் எனக்கு அன்றே கற்று தந்திருந்தால் இவ்வளவு வருடங்களை இழந்து அதன் பின் புரிந்து கொண்ட சந்தையை அன்றே புரிந்து கொண்டிருப்பேன்..எனது இழப்பினை சிறிதாக்கி கொண்டிருப்பேன் ..

அன்று எனக்கு அந்த பயிற்சி அனுபவம் கிடைக்கவில்லை...

அடுத்ததாக
நல்ல பயிற்சியாளர்கள்  எப்படி இருப்பார்கள் ????

முதலில் எவரும் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ...எல்லோரும் ஏமாற்றுபவர்களாக இருக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது..

எல்லோரும் ஒவ்வொரு FORMULA பின்பற்றுவார்கள் ஒவ்வொரு வகையிலான TRADE முறையை செயல்படுத்துவார்கள் ,,ஒவ்வொரு முறையை கற்று தருவார்கள் ..ஒவ்வொருவருக்கும் ஏதேனும் திறமை இருக்கலாம்..அதை கற்று தருவார்கள்..யாரிடம் இருந்து எது கிடைக்கும் என்று தெரியாது..

நல்லதை தேர்ந்தெடுக்க எனக்கு தெரிந்த ஒரே ஒரு வழி ..நீங்கள் யாரிடம் பயிற்சி பெற விரும்புகிரிர்களோ ? அவரை தொடர்பு கொண்டு பேசும் போது அவரிடம் பயிற்சி பெற்ற அவரது மாணவர்கள் சிலரது எண்களை கேளுங்கள் ...
அந்த எண்கள் மூலம் அவரது மாணவர்களை  தொடர்பு கொண்டு பேசுங்கள் ..

(பயிற்சி கொடுப்பவர் அவரது அலுவலக உதவியாளர்கள்,அவரது நண்பர்கள்  எண்களை கொடுத்து பயிற்சியாளர் பற்றி நல்ல விதமாக சொல்லி ஏமாற்ற வாய்ப்பு உள்ளது) எனவே முடிந்தால் அந்த மாணவர்களிடம் நேரில் சென்று பேசுங்கள் ..பயிற்சிகொடுத்தவர் பற்றி அவரிடம் பயின்ற மாணவர் சொல்லட்டும் அவரிடம் பயின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று அதன் பின் பயிற்சிக்கு செல்லுங்கள் ..இது ஓன்று தான் வழி ..

இன்னும் ஒரு வழி ..அங்கெ பயிற்சிக்கு போய் அவர்கள் சொல்லுவதை முழுமையாக உள்வாங்கி அதில் உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்து கொண்டு தேவை இல்லாததை விட்டு விடுவது .

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்..இங்கே அதிகபட்சம் இருப்பது போலிகள் தான்..எது நல்லது எது கெட்டது என்பதை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் ..தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள்..தவறுதலாக தேர்ந்தெடுத்து விட்டு அதன் பின் புலம்புவதில் பலன் இல்லை ...

இவை எல்லாவற்றையும் விட மிக எளிய வழி ஓன்று இருக்கிறது..
இந்த பங்கு  சந்தையில் ஜெயிக்க' ..மிக அருமையான வழி அது ..

ஒரு 3 மாதம்  முதல் 6 மாதம் வரை எந்த TRADE உம்  செய்யாமல்,TERMINAL,ஒன்றும் ,CHART ஓன்று வாங்கி  கொண்டு (CANDLE மட்டும்)பாருங்கள் ..
தினசரி காலை 9.15 முதல் 3.30 வரை ஒரு 4 SHARES  மட்டும் எடுத்து கொண்டு அதனுடன் NIFTY ,BANKNIFTY FUTURE எடுத்து வைத்து கொண்டு (OPTION தேவை என்பவர்கள் தேவையான STRIKE PRICE வைத்து கொண்டு )ஒரு 3 மாதங்கள் கவனியுங்கள் ..
அதன் பின் உங்கள் தகுதிக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட பணத்தை மாதம் ஒரு 10000 ரூபாயாவது ACCOUNT இல் போட்டு நீங்கள் கடந்த 3 மாதம் நீங்கள் செய்ய நினைத்த TRADE ஐ  அடுத்த 3 மாதம் TRADE செய்து பாருங்கள் ..இழப்பு வந்தாலும் பரவாயில்லை ..கண்டிப்பாக PAPER TRADE செய்ய கூடாது ..

ஒவ்வொரு தவறுக்கும் பணத்தை இழந்தால் அடுத்த அந்த தவறு செய்ய மாட்டோம்,,,இது தான் வெற்றியின் சூட்சுமம் ..எனது வெற்றியும் சாத்திய பட்டது இப்படிதான் ..நான் கற்று கொண்டது இப்படி தான் ...

இதன் பின் நீங்கள் எந்த பயிற்சியாளரையும் தேடவேண்டாம்..

இவை தான் பயிற்சியாளர்கள்  பற்றிய எனது கருத்து ..
இந்த பதிவில் தவறுகள் இருப்பின் கண்டிப்பாக சுட்டிகாட்டவும் .....

நிறைய  நண்பர்கள் என்னுடைய CHAT BOX இல் வந்து ஒவ்வொரு TIPS PROVIDER ,பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள் பேர் சொல்லி இவர் நல்லவரா ?இவர் கெட்டவரா ?என்று கேட்கின்றனர் ..

..இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது ..(நானும் கூட )..ஏனென்றால் நான் எனது பயிற்சி வகுப்புகள்  திட்டமிடுவது மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் தான்..அதன் பின் எவரேனும் தொடர்பு கொண்டால் அவர்களை அடுத்த மாதம் EXPIRY முடிந்த வுடன் FB இல் UPDATE போடுவேன் அப்போது வாருங்கள் என்று சொல்லிவிடுவேன் ..ஏனென்றால் மாதத்தின் முதல் 10 நாட்களில் OPTION இல் பெரிய அளவு TRADE செய்ய முடியாது ..அந்த நேரத்தில் வகுப்புகள் நடத்துகிறேன் ..10-30 தேதி வரை எனக்கு TRADE தான் முக்கியம் ..வகுப்பு எடுப்பதில் கிடைக்கும் பணத்தை  விட இங்கே TRADING இல் அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற சுயநலம் தான் ...இப்படி தான் இப்படிதான் எல்லோரும் இருப்பார்கள்..எனவே தயவுசெய்து இது போல் வந்து கேட்டு உங்கள் நேரத்தை இங்கே வீணாக்க வேண்டாம்..

இன்னும் சில நண்பர்கள் இவர் என்னை இப்படி ஏமாற்றினார் ,, ,இந்த TIPS PROVIDER உங்களை(ZFORMULA RAVI ) பற்றி குறை சொன்னார் என்று எனது COMMENT BOX இல் வந்து UPDATE செய்கின்றனர் ..,இன்னும் சிலர் என்னிடம் போன் செய்து இந்த பயிற்சியாளர் உங்களை பற்றி இப்படி அசிங்கமாக பேசினார் என்று வருத்த படுகின்றனர்...

தயவு செய்து என்னிடம் வந்தோ ,எனது COMMENT BOX இலோ பிறரை பற்றி குறை கூறுவதை தவிர்க்கவும்..இந்த பதிவுகள் நிறைய நண்பர்களை சென்றடைய வேண்டும் .இந்த கட்டுரை நிறைய நண்பர்களுக்கு விழிப்புணர்வை தரவேண்டும்..அவ்வளவு தான் ..பிறரை குறைகூற இது இடம் இல்லை..தயவு செய்து விட்டு விடவும் ..

 TIPS கொடுக்கும் ,TRAINING CLASS எடுக்கும் அன்பு சகோதரர்களுக்கு ,ஒரு சின்ன வேண்டுகோள் ,ஒரு சிலர்   எனது பெயர் குறிப்பிடாமல்,பெயர் குறிப்பிட்டு இங்கே என்னை பற்றி தவறாக COMMENT செய்வது,விமர்ச்சனம் செய்வது  எனக்கும் தெரியும் நான் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை ..நான் பதிலும் சொல்வதில்லை .

இங்கே TRADER களை ஏமாற்ற எனென்ன மாதிரி நீங்கள் முயற்சிகள் செய்து வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும்..

நான் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை..உங்களுக்கும் இந்த சந்தையில் ஏதாவது திறமை இருக்கும்,ஏதாவதுவழிகள் தெரிந்திருக்கும் இந்த சந்தையில் சம்பாதிக்க .. ..உங்களின் அந்த திறமையை நான் மதிக்கிறேன்.அதனால் தான் நான் பெயர் குறிப்பிட்டு யாரையும் குறை சொல்வதில்லை  ..

குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்று சொல்வார்கள் ...இங்கே பங்கு சந்தையில் இப்படி ஏமாற்றுகிறார்கள் என்று எழுதினால்,உங்களிடம் இருந்து ஏன் எதிர்ப்பு வருகிறது..???  அதற்கு உங்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தால்,,நீங்களே உங்களிடம் தவறு உள்ளது  என்பதை ஒப்பு கொள்வதாக தான் தோன்றுகிறது...

.நான் உங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதிற்கு முக்கிய  காரணம் " மார்க்கெட் இருக்கிறது " உங்களுக்கு பதில் சொல்ல..உங்கள் திறமை பொய்யென்று நிருபிக்க ..இங்கே மார்க்கெட் உள்ளது..

பங்குசந்தை  சொல்லும் இங்கே
யார் நல்லவர் என்று ??
யார் கெட்டவர் என்று ??
யார் திறமையானவர் என்று ?
யார் திறமையற்றவர் என்று..?

தோழமையுடன்
ZFORMULA RAVI

உங்களின் மேலான கருத்துகளையும், பகிர்வையும் வரவேற்கிறேன் ...

Friday, 17 July 2015

யார் தான்  நல்ல TIPS PROVIDER ..???

 உங்கள் டிப்ஸ் PROVIDER எப்படி பட்டவர்  என்று இரண்டு வாரங்களுக்கு முன் எழுதி இருந்தேன்..அதன் பின் நிறைய நண்பர்கள் அது பற்றி என்னிடம் CHAT இல் பேசினர்  ..இதுவும் போக இன்னும் சில நண்பர்கள் TIPS PROVIDER பற்றி,TRAINING CLASS எடுப்பவர்கள் பற்றி கடுமையாக திட்டி தரக்குறைவாக எழுதி விவாதித்து வருகின்றனர் ... அந்த விவாதத்தில் அவர்கள் முன் வைக்கும் ஒரு சில விஷயங்கள் திரும்பவும் தவரான பாதையை நோக்கி TRADER களை வழிநடத்துவது போல் எனக்கு தோன்றுகிறது...எனவே அது பற்றிய ஒரு பதிவு தான் இது ..

 TIPS PROVIDER  பார்த்து இவர்கள் கேட்கும் கேள்வி நீங்கள் உண்மையான TIPS PROVIDER என்றால் உங்கள் ஒரு மாத TRADE BOOK காட்டுங்கள் ??,ஏன் உங்கள் TIPS  க்கு நீங்கள் TRADE செய்ய மாட்டீர்களா ??நீங்கள் கொடுக்கும் TIPS க்கு மற்றவர்கள் தான்  TRADE செய்ய வேண்டுமா ???
இந்த கேள்விகள் நியாயமான கேள்விகள் போல் தோன்றலாம்..நீங்களும் இதே கேள்வியை TIPS PROVIDER களை பார்த்து கேட்க நினைத்திருக்கலாம்  ???
உங்களின் இந்த கேள்விக்கெல்லாம் இங்கே பதில் தரலாம் என்று நினைக்கிறன் ..இந்த பதில் எனது TRADING அனுபவத்தில்,மற்றும் முன்பு TIPS கொடுக்கும் போது கிடைத்த அனுபவத்தை வைத்து எழுதி உள்ளேன் இது எனது கருத்து மட்டுமே ..

TIPS PROVIDER ஐ பார்த்து ஒரு மாத TRADE BOOK கேட்கிறார்கள்..
ஒரு  TIPS PROVIDER ஒரு மாத TRADE BOOK காண்பித்தால் அவர் நல்லவரா ???
உதாரணமாக ..(உதாரணத்திற்கு மட்டும்..)
இங்கே நான் (ZFORMULA RAVI )TIPS கொடுப்பவனாக இருக்கிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் ...நான் ஒரு மாத TRADE BOOK (இலாபத்தோடு )இங்கே UPDATE செய்து விட்டால் நான் நல்ல TIPS PROVIDER  ஆகிவிடுவேனா ??..உடனே எல்லோரும் என்னிடம் சேர்ந்து TIPS வாங்க ஆரம்பித்து விடுவீர்கள் சரி..

அப்படியே நான் இங்கே காண்பித்த அந்த மாதம் நன்றாக இருந்த என்னுடைய (TRADE BOOK ) காரணமாக என்னிடம் நீங்கள் பணம் கட்டி சேருகிறீர்கள் ..அடுத்த மாதம்  நான்  கொடுத்த  TIPS நிறைய FAIL ஆகி உங்கள் முதலீடு மொத்தமும்  இழந்து விடுகிறீர்கள் ..  அப்போதும் இவர் போன மாதம் நன்றாக TRADE செய்திருக்கிறார்  ..இந்த மாதம் தான்  இப்படி தவறாக போய்விட்டது..என்று எதுவும் சொல்லாமல் இவர் நல்ல TIPS PROVIDER என்று அப்போதும் சொல்லுவீர்களா ????
மாட்டீர்கள் தானே ???அப்புறம் ஏன் TRADE BOOK காட்டுகிறவர் நல்லவர் என்பது போல நினைகிறீர்கள் ..
உங்களுக்கு TRADE BOOK மூலம் தான்  ஒருவர்  நல்லவரா?கெட்டவரா ? என்பது தெரிய வேண்டுமா ?

எனது நண்பர் ஒருவர் சென்னையில் மிக பெரிய SUBROKER அவருக்கு கீழ் சுமார் 800 CLIENTS TRADE செய்து வருகின்றனர் அவரது CLIENT களில் சுமார் 3 கோடிக்கு மேல் ACCOUNT இல் பணம் வைத்து TRADE செய்பவர்கள் சுமார் 16 பேர் இருகின்றனர் ..அவர்களது ACCOUNT இல் பெரும்பாலும் இழப்பே வராது .. நான் அந்த நண்பரிடம் சொன்னால் தினமும் மாலை 3.35 க்கு யாருடைய ACCOUNT இலாபத்தில் இருக்கிறதோ அந்த TRADE BOOK  ஒரு நான்கு அல்லது ஐந்து தினசரி அனுப்பி வைப்பார் ..அதை ID ஐ மட்டும் மறைத்து விட்டு இங்கே UPDATE செய்து காண்பித்தால் போதுமா ??? நான் நல்ல TIPS PROVIDER ஆகவோ ,நல்ல TRAINING CLASS  TEACHER ஆகி விடுவேனா ???
பின் எப்படி TRADE BOOK ஐ நீங்கள் அளவு கோலாக வைக்கிறீர்கள் ??

8000-10000 கோடி ரூபாய்களை நிர்வாகம் செய்யும் MUTUAL FUND திட்டங்களே முந்தைய(10 ஆண்டு கால 15 ஆண்டு கால) இலாபம்.. வரும் காலத்தில் கிடைக்கும் என்பது உறுதி கிடையாது என்று அறிவிப்பு கொடுத்து தான் இங்கே அவர்களது MUTUAL FUND  UNIT களை விற்பனை செய்கின்றனர் ,,,விளம்பரம் செய்கின்றன..  நீங்கள் கடைசி ஒரு மாத TRADE BOOK  வைத்து உங்கள் TIPS PROVIDER ஐ தேர்வு செய்ய நினைக்கிறீர்கள் ..எவ்வளவு பெரிய முட்டாள் தனமான முடிவு இது ????

கொஞ்சம் யோசித்து பாருங்கள்..

உங்கள் TIPS க்கு நீங்கள் TRADE செய்ய மாட்டீர்களா ??/ ஒரு TIPS PROVIDER ஐ பார்த்து நீங்கள் கேட்கும் பெரிய  முட்டாள் தனமான கேள்வியே இது தான் ..
ஒருவன் TRADE செய்கிறான் என்றால் அவன் ஒரு நல்ல TIPS PROVIDER ஆக இருக்க முடியாது..எப்படி என்று நீங்கள் கேட்கலாம் ..

ஒரு சின்ன உதாரணம் இங்கே ..நான் பயிற்சி வகுப்புகள் எடுத்த உடன் முதல் BATCH இல் பயின்றவர்களுக்கு ஒரு FB CHATING இல் ஒரு GROUP (ZFORMULA STUDENTS ) என்று அமைத்து கொடுத்தேன்..அவர்கள் இந்த FORMULA எப்படிசந்தை தினசரி எப்படி செயல் படும் என்பதை கலந்துரையாடி NIFTY MOVEMENT பற்றி விவாதிட்டுமே என்று.... ஆனால் அங்கு 2ஆம் நாள் எங்களது ZFORMULA படி மார்க்கெட் மேலே போகவேண்டும்..ஆனால் அங்கெ இருந்த 7 நண்பர்களும் நமது ZFORMULA VIEW படி MARKET மேலே போக போகிறது என்று சொல்ல ஒரு சகோதரர் மட்டும் இல்லை CHARTஇல் CANDLE  WEAK ஆக உள்ளது ...மார்க்கெட் கீழே வரும் என்று சொல்ல மற்ற நண்பர்கள் ZFORMULA வை நம்பவா ?இல்லை அந்த நண்பர் சொன்னபடி CHART ஐ நம்பவா என்று குழம்பி போய் அன்று TRADE ஏதும் செய்யவில்லை .முடிவில் எங்களது ZFORMULA படி MARKET மேலே சென்றது..

மாலை MARKET WEAK ஆக இருக்கும் என்று சொன்ன அந்த நண்பரிடம் PHONE செய்து கேட்கும் போது தான் தெரிந்தது அவர் 2 நாளுக்கு முன்பே 80000 ரூபாய்க்கு NIFTY PUT OPTION வாங்கி  வைத்து இருக்கின்றார் ..அதனால் இங்கே அவர் பார்க்கும் எல்லா VIEW வுமே இங்கே மார்க்கெட் இறங்க போகிறது என்பதை தான் காட்டும் ..ஏனென்றால் அங்கே அவரது பணம் 80000 ரூபாய் PUT OPTION இல் முடங்கி போய் உள்ளது ..இங்கே மார்க்கெட் இறங்கினால் மட்டுமே அவரது முதலீடு திரும்ப கிடைக்கும் இந்த இடத்தில் அவரது மனம் எப்படியாவது மார்க்கெட் இறங்கவேண்டும் என்று தான் வேண்டும்..தேடுவது எல்லாம் எந்த VIEW வந்தால் மார்க்கெட் இறங்கும் என்பதாக தான் இருக்கும்..

இங்கே ஒருவேளை அவர் எந்த POSITION உம் (அந்த PUT OPTION )இல்லாமல் இருந்தால் அவர் அன்று எங்களது ZFORMULA VIEW படி மார்க்கெட் ஏறும் என்பதை அவரும் சொல்லி இருப்பார்..

இதே போல உங்கள் நல்ல (TRADE செய்யும் )TIPS PROVIDER ஒரு 50000 ரூபாய்க்கு PUT OPTION வாங்கி வைத்து இருந்தால்..அவர் எப்படி உங்களுக்கு மார்க்கெட் ஏறும் போது CALL OPTION வாங்க சொல்லுவார் ?? அவர் கவனம் எப்படி அவர் வைத்துள்ள PUT OPTION விலை ஏறும் என்பதை யோசிக்குமா ? அல்லது உங்களுக்கு TIPS கொடுத்து உங்களை இலாபம் சம்பாதிக்க வைக்க வேண்டும் என்பதை யோசிக்குமா ????அவர் எப்படி நடுநிலையோடு TIPS கொடுக்க முடியும்???

அடுத்த உதாரணம்
இன்று மார்க்கெட் +20 புள்ளிகள் + இல் இருக்கிறது அது +140 புள்ளிகள் போகும் சூழ்நிலை இருக்கும் போது உங்கள் TIPS PROVIDER  TIPS கொடுத்து தவருதலாக NIFTY FUTURE விற்க  சொல்லிவிட்டார் ..அவரும் ஒரு 1000 QUANTITY விற்று விட்டார் ...மார்க்கெட் +60 புள்ளிகள் போகும் போது, அவர் கொடுத்த SL TRIGGER ஆகிவிட்டது  ..அவரிடம் டிப்ஸ் வாங்கிய உங்களுக்கும் இழப்பு அவருக்கும் இழப்பு..   சரி இந்த சுழலில் அவர் இழந்த 40000 ரூபாய் எப்படி அவரை அடுத்த டிப்ஸ் ஐ நிம்மதியாக கொடுக்க வைக்கும்???
உங்கள் TRADING இல் ஒரு தவறு நடந்து ஒரு இழப்பு வந்து விட்டால் ,அன்றைக்கு அடுத்தடுத்து எல்லாமே இழப்பாக முடியும்..நீங்களே இதை உணர்ந்திருப்பீர்கள்  ..
ஒரு இழப்பில் இருக்கும் ஒருவர் எப்படி முழு திறமையோடு அந்த இழப்பை மறந்து MARKET பற்றி கணிக்க முடியும்???

நீங்கள் கவனித்து இருக்கலாம் ..BROKER OFFICE இல் யாரோ ஒரு TRADER சும்மா வந்து உட்கார்ந்து இருப்பார் ..TRADE செய்ய மாட்டார் (பணம் இருக்காது)
ஆனால் அவர் சொன்ன STOCK எல்லாம் ஏறும் ??அவர் சொன்ன STOCKS எல்லாம் இறங்கும் ..அதுவே அவர் பணம் போட்டு TRADE செய்யும் போது அங்கெ அவர் தோற்று போவார் ..ஏனென்றால் நேற்று அவர் சொல்லும் போது அவரிடம் எந்த பணமும் இல்லை ..எந்த POSITION உம இல்லை அதனால் அவர் நடுநிலையுடன் இருந்தார்..அவர் சொன்னது நடந்தது..இன்று அவர் TRADER ஆக மாறும் போது இங்கே அவரது ACOUNT இல் உள்ள பணம் இழந்துவிட கூடாது என்று பதட்டத்தில் தவறு செய்கிறது ..

இன்னும் சொல்ல போனால்

பங்கு சந்தையை நிர்வாகம் செய்யும் SEBI யின் உத்தரவு படி ஒருவர் SUBBROKER ஆக ஒரு நிறுவனத்தில் சேரும் போது ,அந்த நிறுவனத்தில் அவர் பெயரில் TRADING ACCOUNT தொடங்க முடியாது ..NCFM பயிற்சி முடித்து DELEAR ஆக ஒருவர் பணியில் சேரும் போது அவருக்கு அந்த நிறுவனத்தில் TRADING ACCOUNT இருக்க கூடாது..இதுவெல்லாம் எதற்கு தெரியுமா ?? அவர்களுக்கு ACCOUNT இருந்தால் அங்கே  அவர்கள் TRADE செய்வார்கள்..அவர்கள் கவனம் அவர்களின் POSITION மீது மட்டும் தான் இருக்கும் ..மேலும் அவர்களின் TRADING சிந்தனையை அங்கே  TRADE செய்ய போகும் CLIENT மீது திணிக்க வாய்ப்புள்ளது..இதனால் இங்கே CLIENT  பாதிக்க பட கூடாது என்பதற்காக தான் ..

பெரிய BROKING நிறுவனங்களில் எனது நண்பர்கள் சிலர் பணி செய்கின்றனர் ..(ANALYST ஆகவும் DELEAR ஆகவும் )இங்கே அவர்களது பணி செய்யும் அறைக்குள் அவர்களின் செல்போன் க்கு அனுமதி கிடையாது..ஏனென்றால் இவர்கள் வேறு எங்காவது ACCOUNT வைத்து இருந்து PHONE மூலம் ORDER போட்டு TRADE செய்தால் அவர்களது கவனம் சிந்தனை அவர்கள் அங்கு அவர்களது சொந்த அக்கௌண்டில்  வாங்கிய அவர்களது SHARE இன் மீது தான் இருக்கும் ..இங்கே CLIENT மீதான இவர்கள் கவனம் குறையும் என்பதற்காக தான்...

இப்படி  TRADE செய்து கொண்டே TIPS கொடுக்கும்  போது இவ்வளவு பிரச்னை இருக்கும் போது எப்படி நீங்கள் TIPS  கொடுக்கும் நபர் TRADE செய்ய வேண்டும் நினைக்கிறீர்கள் ???

உண்மையில் ஒருவன் TIPS கொடுக்கிறான் என்றால் அவனால் TRADE செய்ய முடியாது ..ஒருவன் TRADER ஆக இருக்கிறான் என்றால் அவனால் நல்ல விதமாக TIPS கொடுக்க முடியவே முடியாது..இது தான் உண்மை..

இதெல்லாம் விட்டு விட்டு ஒருவன் TRADE BOOK காட்டினால் அவன் நல்லவன் என்றும் ..அவன் TIPS க்கு அவனே TRADE செய்பவனெல்லாம் நல்லவன் என்று நினைக்காதீர்கள் ..

இங்கே பிரச்சனை என்னவென்றால் நல்லவன் ஒரு மடங்கு என்றால் போலிகள் 1000 மடங்கு இருகின்றனர் அது தான் பிரச்சனை ..உங்களின் குழப்பத்திற்கு காரணமும் இதுதான்... இங்கே நீங்கள் பார்ப்பது எல்லாம் போலி என்பதால் நல்லது எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் போனதன் விளைவு தான் இது..

இவ்வளவு பிரச்சனைகளை சொல்லிவிட்டு இங்கே தீர்வினை சொல்லாமல் விட்டால் இந்த கட்டுரை போலி TIPS PROVIDER க்கு சாதகமாக எழுதப்பட்டது போல் ஆகிவிடும் எனவே நல்ல TIPS PROVIDER யார் என்று  என்னிடம் கேட்டால்..எனது கருத்தின் படி...(கவனிக்க : இது எனது கருத்து மட்டும் தான் )

எவன் ஒருவன் தனது TRADE BOOK அல்லது CONTRACT NOTE UPDATE செய்கிறானோ அவன் உங்களை ஏமாற்ற தயாராகிவிட்டான் என்று அர்த்தம்..

எவன் ஒருவன் NIFTY ,STOCKS,FUTURES,OPTIONS,CRUDEOIL,GOLD,SILVER (ALL MCX,CURRENCY ,CURRENCY FOREX   )என எல்லாவற்றிலும் நான்  TIPS கொடுக்கிறேன் என்று சொல்கிறானோ..அவன் சொல்லுவது முழு பொய் ....யாராலும் எல்லா MARKET இலும் சிறப்பாக செயல்பட முடியாது ..

மார்க்கெட் ஆரம்பிக்கும் முன்பே LEVEL தருகிறேன் EXCEL SHEET இல் தருகிறேன் என்றால் அவர்களிடம்  உங்கள் பணத்தை இழக்க வேண்டாம்..மார்க்கெட் நடக்கும் போது டிப்ஸ் பெறுவது தான் உங்கள் பணத்திற்கு ஓரளவு உத்திரவாதம் ..

உண்மையான TIPS PROVIDER ஐ கண்டு பிடிக்க ஒரு எளிய வழி

உங்களிடம் TIPS தருகிறேன் 2 நாள் FREE TRIAL வாங்கி பாருங்கள் என்று சொல்லுபவரிடம் நீங்கள் கேளுங்கள் ப்ரீ TRIAL கொடுங்கள் என்று..

ஆனால் நீங்கள் ஒரு 3 STOCKS பெயரை சொல்லி அவர்கள் கொடுக்கும் FREE TRIAL  இந்த 3 STOCK இல் மட்டும் கொடுக்க சொல்லுங்கள் ..இல்லை அவர்கள் ஏதாவது ஒரு 3 STOCK (அவர்கள் இதற்கும் முன் நன்கு பயிற்சி பெற்ற STOCK ஆக இருக்கலாம் ) சொல்ல சொல்லி இந்த 3 STOCK MOVEMENT பற்றி சொல்ல சொல்லுங்கள் ,,,MOVEMENT என்றால் LEVELS அல்ல ..

இந்த 3 STOCK க்கும் LIVE MARKET இல் TRADE ஆகி கொண்டு இருக்கும் போது BUYING PRICE ,SELLING PRICE ,SL இந்த மூன்றும் அனுப்ப வேண்டும் 2 நாள் FREE TRIAL இல் இந்த 3 STOCKS இல் மட்டும் ஒரு 4 TIPS அவர் கொடுத்து 3 PASS ஆகி ஓன்று FAIL ஆனால் அவர் தான் சிறந்த TIPS PROVIDER ..
இந்த நபரை நம்பி நீங்கள் TIPS வாங்கலாம் ..

இது தான் நல்ல TIPS PROVIDER பற்றி எனது கருத்து..

TIPS PROVIDERS பற்றி பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள் பற்றி  எனது  மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன் ..இவை எனது கருத்துகள் தான் இது ...இதை நீங்கள் கட்டாயம் ஏற்று கொள்ள வேண்டியது இல்லை...இந்த கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் இந்த பதிவை பகிரவும் ..

தோழமையுடன்
ZFORMULA RAVI



Friday, 26 June 2015

என்னால்  இந்த பங்குசந்தையில் ஜெயிக்க முடியுமா..???

இந்த கேள்வியை உங்கள் மனசாட்சி உங்களிடம் அநேக தடவை கேட்டிருக்கும் ...அதற்கான விடையாக இந்த பதிவு அமையக்கூடும்.. நீங்களும் படியுங்கள்,,கண்டிப்பாக மறக்காமல் SHARE செய்யுங்கள்...இதை படித்து முடிந்தவுடன் நீங்கள் செய்த தவறை நீங்களே சரி பார்க்க உதவியாகவும் ,அதன் பின் இந்த தொழிலில் நீங்கள் இருப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவும் உங்களால் முடியும்..


பங்கு சந்தை ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1.5 இலட்சம் கோடி வணிகம் நடக்கும் ..இடம்.இது ஒரு மிக பெரிய தொழில்...இந்த தொழிலில் 100 க்கு 99 பேர் பணத்தை இழந்து ..மிக ஒரு சிலரே அந்த மொத்த பணத்தை சம்பாதித்து கொண்டும் இருக்கின்றனர் ..


இந்த தொழிலில் ஒவ்வொருவரும் நுழைவது  நண்பர்கள் சொன்னார்கள் அவர் சொன்னார் இவர் சொன்னார்,என்று ACCOUNT OPEN செய்து தொழிலில் நுழையும் போது   முதலீடு செய்வது என்னவோ 10000-50000 மட்டுமே...ஆரம்ப காலத்தில் எதிர்பார்ப்பதும் தினசரி 500 கிடைத்தால் போதும்..1000 கிடைத்தால் போதும் என்று தான் உள்ளே வருகின்றனர்...தினசரி வணிகத்தில் அவர்கள் எதிர்பார்த்த 300-500-1000 என ஒரு சில நாட்கள் கிடைக்கும் அதே போல 500-1000 என இழப்பும் வரும்..அதையெல்லாம் தாண்டி அடுத்து அவர்கள் செய்யும் தவறு  இலக்கில்லாமல் கணினி முன் வந்து அமருவது...


அதற்கு முன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி..காலையில் வந்து அமர்ந்தவுடன்

முதல் 2-3 வியாபாரத்தில் ஒரு 2000 ரூபாய் (50000 முதலீடிற்கு )கிடைத்தவுடன் COMPUTER ஐ விட்டு எழுந்து போய்விடுவேன் என்று உங்களில் ஒரே எவராவது இருகிறீர்களா ?

எவருமே இருக்க முடியாது ...இந்த ஒரு விஷயம் இந்த ஒரு விஷயம் தான் உங்களின் முதல் எதிரி ..

இலக்கில்லாமல் உள்ளே வராதீர்கள் வந்தீர்கள் என்றால் உங்கள் பணமும் இலக்கில்லாமல் அழிந்து போய்விடும்...

வெறும் 300 ரூபாய் ஒரு நாளைக்கு கிடைத்தால் போதும் என்று இந்த தொழிலுக்கு வந்து இன்று 30 இலட்சம் ரூபாய் கடனில் இருக்கும் நண்பர்களை சந்தித்து இருக்கிறேன்.. இதே கோவையில் 600 பேர் க்கு முதலாளியாக  ஒரு தொழிற்சாலை அதிபர் இன்று அதே தொழிற்சாலையில் வேலைக்கு செல்கிறார்.. அதே போல வெறும் 3500 ரூபாய் சம்பளத்திற்கு (1985 இல் ) வேலைக்கு சென்று கொண்டிருந்த ஒரு நண்பர் சென்னையில். இன்று 600  கோடிக்கும் அதிகமாக சம்பாதித்து இருப்பதும்..இந்த தொழிலினால் ...


எல்லாவற்றிர்க்கும் முதல்  காரணம் இலக்கு இல்லாதது தான்..எதற்காக இந்த தொழிலுக்கு வந்திருக்கிறோம் ??? நம்மிடம் இருக்கும் முதலீட்டிற்கு நாம்  எதிர்பார்க்கும் தொகை எவ்வளவு.. இந்த தொகையை சம்பாதிக்கும் அளவிற்கு நாம் தொழிலை புரிந்து கொண்டிருக்கிறோமா? என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு பாருங்கள்...


ஒரே ஒரு விஷயம் ..உங்கள் வீடு இருக்கும் தெரு முனையில் இருக்கும் ஒரு சின்ன மளிகை கடையில் போய் விசாரித்து பாருங்கள்...அந்த கடை தொடங்கும் முன் அவர் ஏதேனும் மளிகை கடையில் ஒரு 4 வருடம் அனுபவத்துடன் இருந்திருப்பார் ..இந்த கடையை தொடங்க வேண்டி கட்டிடத்திற்கு ஒரு 1 இலட்சம் ரூபாய் ADVANCE கொடுத்திருப்பார்...மளிகை சரக்கு வாங்க வேண்டி ஒரு 2 இலட்சம் ரூபாயாவது முதலீடு செய்திருப்பார் ..இவ்வளவு முதலீடு செய்து அது போக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை  அந்த கடையில் இருந்து வணிகம்  செய்து அன்றைய இலாபத்தை கணகிட்டால் ஒரு 1000 ரூபாய் அல்லது 1500 ரூபாய் அவருக்கு கிடைக்கும்..


இதுவே வேலைக்கு போகும் ஒரு நபரை எடுத்து  கொள்ளுங்கள்..காலை முதல் மாலை வரை 6 நாட்கள் வேலை பார்த்து மாதம் 25 நாட்கள் வேலை பார்த்து அதன் பின் மாத கடைசியில் அவர் கையில் கிடைக்கும் சம்பளம் 30000-40000 வரை மட்டுமே...சராசரி ஒரு நாளைக்கு 1500-2000 ரூபாய் தான் கணக்கீடு வருகிறது..


ஆனால் இந்த தொழிலுக்கு வருபவர்கள் மட்டும்,வரும் போது தினசரி 1000 ரூபாய் கிடைத்தால் போதும் என்று இந்த தொழிலுக்கு வருகின்றனர்..ஆனால் வந்த பின் செய்வதோ..எல்லாம் தலைகீழ் ..ஆசை ஆசை இன்னும் பணம் இன்னும் பணம் ..என்று எந்த  இலக்கும் இல்லாமல் தொழிலும் தெரியாமல்..எல்லாவற்றையும் இழந்து,கடன் வாங்கி அதையும் இழந்து கடனாளி ஆகி ,நண்பர்களுக்கு TRADE செய்து தருகிறேன் என்று அதையும் இழந்து..கடன் கடன் கடன் ,,வட்டி வட்டி வட்டி என்று வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம் ..


ஒரு நண்பர் 2 மாதங்களுக்கு முன் என்னை தொடர்பு கொண்டார் ..10 இலட்சம் போட்டேன் சார்..3 மாதத்தில் 6 இலட்சம் தான் இருக்கிறது..என்ன செய்ய சார் உங்க CLASS க்கு வரணும் சார்..வந்த பின் தான் TRADE செய்ய போகிறேன்..3 மாதத்தில் 4 இலட்சம் போய்விட்டது சார் என்றார்,,,நானும் கவனமாக TRADE செய்யுங்கள் சார் என்று சொன்னேன் ..அதன் பின் தொடர்பு ஏதும் கொள்ளவில்லை..

திரும்ப சென்ற மாதம் தொலைபேசியில் அழைத்து  சார் 3 இலட்சம் தான் இருக்குது சார் மீத பணம் எல்லாம் போய்  விட்டது சார்.உங்க CLASS க்காவது வந்திருக்கலாம் சார் என்று சொன்னார்..இன்னமும் பேசினார் ..  நேற்று ஒரு நண்பர் சொன்னார் PUT OPTION வாங்க சொல்லி MARKET முடியும் போது 27.50ரூபாய்க்கு 10000 QUANTITY வாங்கினேன்,இப்போ 55 ரூபாய் TRADE ஆகிறது ..நான் என்ன செய்ய விற்று விடவா ?? என்று கேட்டார் .. ஒரு இரவில்2.75 இலட்சம் ரூபாய்க்கு  2.75 இலட்சம் இலாபம்  கண்டிப்பாக BOOK செய்யுங்கள் என்று.. அதற்கு அவர் சொன்ன பதில் இங்கே எல்லாரும் சொல்லுகிறார்கள் இது 90 போகும் என்று..நான் வைத்து பார்க்க போகிறேன் சார் என்று...நான் சொன்னேன் பாதியை விற்று விடுங்கள் உங்கள் முதலீடு தப்பி விடும் மீதியை 90 க்கு போகும் வரை காத்திருங்கள் என்று அவர் சொன்னார் .எல்லாம் 90 போனால் 6.25 இலட்சம் கிடைக்கும்  எனது 10 இலட்சம் இழப்பில் இருந்து மீண்டு வந்து விடுவேன் சார் என்று  கூறினார் ....

அதற்கு மேல் நான் எனது சொல்லவில்லை 40-45 SL மட்டுமாவது  போட்டு விட்டு வணிகம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு முடித்து விட்டேன்....ஒரு மணிநேரம் கழித்து PH  செய்து நான் SL  30 இல் போட்டேன் SIR அது TRIGGER ஆகிவிட்டது கமிசன் எல்லாம் போக 8000 ரூபாய் மட்டும் கிடைத்து என்று,,,


திரும்ப ஒரு மாதம்  2ஆம் தேதி தொடர்பு கொண்டு 60000 ரூபாய் தான் அக்கௌண்டில் இருக்கிறது..நீங்கள் எப்போ CLASS எடுப்பிற்கள் என்று கேட்டார் ..நான் இப்போது வகுப்பு ஏதும் எடுக்க வில்லை அடுத்த மாதம் EXPIRY முடிந்தவுடன் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விட்டேன் ...

60000 ரூபாய் இருந்தால் தினசரி ஒரு 1000 ரூபாயாவது சம்பாதிக்க முடியுமா என்று கேட்கிறார்..??

இனிமேல் அவருக்கு கற்று கொடுக்க ஏதும் இல்லை இங்கே அவர் என்னிடம் வந்து பணம் கொடுத்து கற்று கொண்டால் கூட அவருக்கு இழப்பு தான் வரும் ..அவரை பொறுத்த வரை இது ஒரு சூதாட்டம்..அவர் இதை ஒரு தொழிலாகவே மதிக்க வில்லை ..


இது போல தான் நம்மில் பலரும் இருக்கின்றோம்..இந்த தொழிலை ஒரு தொழிலாக எண்ணாமல் 10000-,20000,50000 என்று கடன் வாங்கி  கொண்டு வந்து என்றைக்காவது நாமும் கோடிஸ்வரன் ஆகி விடுவோமா ??? யாராவது (TIPS PROVIDERS ) நம்மை கோடீஸ்வரன் ஆக்கி விடுவார்களா??? என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் ..


இந்த தொழிலில் வெற்றி பெற வேண்டுமானால் ..உங்கள் மனதில் இதை ஒரு தொழிலாக மதியுங்கள்.. 10000-20000 போட்டு விட்டு உங்கள் கோடிஸ்வர கனவினை மார்க்கெட்டில் திணிக்காதிர்கள் ...


அதற்காக 20000 ரூபாய் வைத்து இந்த தொழில் செய்தால் முன்னேற முடியாது என்று சொல்லவில்லை..


ஒரு 25000 ரூபாய் முதலீட்டை சரியான திட்டமிடல் முயற்சி இருந்தால் 11 மாதத்தில் ஒரு கோடியாக மாற்றும் வாய்ப்புகள் உள்ள தொழில் தான் இது..ஆனால் அதற்கு முறையான பயிற்சியும் பொறுமையும் அவசியம்.. பயிற்சி என்பது யாரோ ஒருவரிடமமோ அல்லது எங்களிடமோ வந்து கற்று கொள்ளவதில்லை..உங்களது தீராத ஆர்வத்தினால் மட்டுமே வருவது...அமைதியாக இருந்து ஒரு 6 மாதம் எந்த TRADE உம் செய்யாமல் மார்க்கெட்டில் ஒரு நாள் விடாமல் (9.15--3.30வரை ) வேடிக்கை மற்றும் பாருங்கள் மார்க்கெட் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்..அதன் பின் நீங்கள் தான் இராஜா இந்த தொழிலுக்கு..


ஒரு சின்ன கதை இங்கே..


இரண்டு மீனவர்கள் இருந்தார்களாம்..அவர்கள் இரண்டு படகுகளில் மீன் பிடிக்க செல்லும்  போது ஒரு தீவில் சற்று இருந்து விட்டு திரும்ப மீன் பிடிப்பார்களாம்..ஒரு நாளும் அந்த தீவின் உள்ளே சென்றது கிடையாதாம்..ஒரு நாள் அப்படி அந்த தீவில் ஓய்வெடுக்கும் போது அங்கே  ஒரு பாறையில் ஒரு MAP பாதை ஓன்று போட்டு இங்கே புதையல் உள்ளது..என்று எழுதி இருந்ததாம்..


அவர்கள் அங்கே அந்த MAP இன் படி போய் உள்ளே போய தேடும் போது வெகு நேர சிரமத்திற்கு பின் மிக பெரிய புதையலை கண்டு பிடித்தார்களாம் ..மிகப்பெரிய என்றால் பெரும் மலையளவு தங்கம்,வைரம் என கொட்டி கிடந்ததாம்..


ஒரு  மீனவன் படகு நிறைய நிரம்பி வழியும் அளவு அள்ளி நிறைத்து கொண்டான்..

மற்றொரு மீனவனோ படகில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தங்கம் ஏற்றி கொடு கிளம்பினான் ..
முதலாவது மீனவன் கேட்டானாம் ஏன்டா உனக்கு இவ்வளவு போதுமா ?? என்று ??
இரண்டாவது மீனவன் சொன்னான் ..எனக்கு இங்கே இருக்கிற எல்லாமே தான் வேணும்.. ஆனால் இதை நாம் மட்டும் தான் பார்த்திருக்கிறோம்..அதனால் தினசரி வந்து கொஞ்சம் கொஞ்சமாவாக எடுத்து கொள்வோம் என்று..

உனக்கு வேண்டுமானால் இதை மட்டும்  எடுத்து கொள். எனக்கு படகு நிறைய வேண்டும் என்று சொல்லி விட்டு முதலாவது மீனவன் அப்படியே வேகமாக கிளம்பினான் ..


திரும்ப இதே படகில் வந்து இன்னொரு  முறை படகு நிறைய வந்து அள்ளி கொண்டு போக வேண்டும் என்று ஆசை பட்ட முதலாவது மீனவன் வேகமாக படகை ஓட்டினான்..


இரண்டாவது மீனவனோ நிதானமாக ஓட்டினான் ..இந்த புதையல் முழுவதும் நம்முடையது தான் என்று நம்பினான்..


சற்று நேரத்தில் வந்த கடல் கொந்தளிப்பில் ,இருவரின் படகும் தடுமாறியது..

இரண்டாவது மீனவனின் படகு குறைவாக  தங்கம் இருந்ததால்,கொஞ்சம் தடுமாறியது..

முதல் மீனவனின் படகு அதிக எடை,அந்த மீனவனின் பதட்டம் என வேகமாக (முழ்கும் அளவிற்கு )ஆடியது...இரண்டாவது மீனவன் முதல் மீனவனை பார்த்து சொன்னான் ,,கொஞ்சம் தங்கத்தை குறைத்து கொள்..படகை முழக்காமல் காப்பாற்றி விடலாம் என்று..


முதல் மீனவன்  சொன்னான் இது  எனக்கானது..நான் இதில் ஒரு கிராம் கூட இழக்க மாட்டேன் என்று,,,

சற்று நேரத்தில் முதல் மீனவன் அதிக எடை காரணமாக படகு கடலில் முழ்கி இறந்து போனான்,,

ஆனால் இரண்டாவது மீனவனோ..அந்த கொஞ்சம் தங்கம் கொண்டு வந்ததால் முழ்காமல் தப்பி வந்து அந்த தங்கத்தை விற்று இன்னும் பெரிய படகு வாங்கி அதை கொண்டு இன்னும் நிறைய தங்கம் கொண்டு வந்து அதை விற்று பெரிய கப்பல் வாங்கி அந்த தீவின் முழு தங்கத்தையும் கொண்டு வந்து கோடீஸ்வரன் ஆகிவிட்டான் ..


இங்கே இந்த தீவு என்பது பங்கு சந்தை..இங்கே மலை போல் பணம் கொட்டி கிடக்கிறது..தெரிந்தோ தெரியாமலோ இங்கே நீங்கள் வந்து விட்டர்கள்..

அந்த படகு என்பது உங்களது முதலீடு ..நீங்கள் எடுத்து கொண்டு போகும் தங்கம் என்பது உங்களது இலாபம்.உங்கள் முதலீடிற்கு ஏற்ற அளவு இலாபம் கொண்டு போன இரண்டாவது படகை போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து கொண்டு அவர்கள் முதலீட்டை பெருக்கி இன்று கோடீஸ்வரர்களாக உள்ளனர்..இவர்கள் ஒரு சிலரே..

முதலீட்டை விட அதிக இலாபம் கொண்டு வர நினைத்த முதலாம் மீனவனை போல தான் இங்கே நிறைய பேர் 10000 முதலீட்டில் தினமும் 2000-3000 வேண்டும் என்று நினைக்கிறோம் ..அது சில சமயம் கிடைக்கவும் செய்கிறது ..ஆனால் மார்க்கெட் கொந்தளிக்கும் தருணங்களில் கொஞ்சம் இழப்பு வந்தால் கூட  நமது இலாபத்தை கொஞ்சம் கூட இழந்து போக கூடாது என்று நினைத்து  மொத்த படகையும் (முதலீட்டையும் ) இழந்து போனவர்கள் தான் ஏராளம்...


இந்த மீனவர்களில் நீங்கள் யாராக இருக்க போகிறீர்கள் ???

தயவு செய்து கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள்..
யாரிடமும் (எங்களிடம் கூட)பணம் கொடுத்து கற்று கொள்ள வேண்டாம்..
பொறுமையாக ஒரு 6 மாதங்கள் மார்க்கெட்டை பார்த்து கொண்டிருந்தால் போதும் உங்களுக்கே மார்க்கெட் புரிய ஆரம்பிக்கும் ..உங்களுக்கே இங்கே நடக்கும் ஏமாற்று வேலைகள் புரிய ஆரம்பிக்கும்...
அதன் பின் இங்கே ஜெயிக்க முடியுமா என்று யோசித்து பாருங்கள் அதன் பின் நம்பிக்கை இருந்தால் ஓரளவு பணத்தோடு இங்கே வாருங்கள்..உங்களால் ஜெயிக்க முடியும்..

உங்கள் மனசாட்சிக்கு ஒரு கேள்வி ??? நீங்கள் TRADING இல் திரும்ப திரும்ப பணத்தை கொண்டு வந்து போடும் போது உங்கள் மனதில் ஒரே ஒரு முறையாவது "இந்த பணமும் போய்விட்டால் என்ன செய்வது" என்ற எண்ணாமல் இல்லாமல் என்றைக்காவது இங்கே பணம் முதலீடு செய்திருக்கிரிங்களா???

இப்படி நினைதிருண்டீர்கள் என்றால் நீங்கள் தொழிலுக்கு வரவில்லை சூதாட வருகிறிர்கள்.என்று நீங்களே முடிவு செய்து விடலாம்...

இந்த பங்குசந்தை தொழிலில் நடப்பது பெரும்பாலும் திட்டமிடப்பட்ட வணிகம் ஒன்றே..எல்லா TRADE உம் இங்கே திட்டமிட்டே நடக்கின்றன...மிக பெரிய கூட்டம் ஓன்று இங்கே பெரும் பணத்தை கொண்டு போய் கொண்டு இருக்கின்றன..


சந்தேகம் இருந்தால் யோசித்து பாருங்கள் நேற்று முன் தினம் NIFTY 8400,BANK NIFTY 18500 இல் முடிந்தது..எவ்வளவு துல்லியமாக அந்த விலையில் வந்து NIFTY யை யை BANK NIFTY யை கொண்டு வந்து நிறுத்த முடியுமா..எல்லாமே இங்கே திட்டம் தான் ..அன்றைய கணக்கீடு என்ன என்றால் ..8400 CALL 8400 PUT ,18500 CALL 18500 PUT என அன்று முடியும் போது 000ZERO வாக முடிக்க வேண்டும் என்பது அன்று போடப்பட்ட திட்டம்...அது ஓரளவு முன்னரே கணிக்க முடிந்ததால் தான்  8395 இல் EXIT AND STAY AWAY என்று அன்று FB இல் UPDATE செய்தோம்..அது 8433 வரை சென்றது திரும்ப 8400 இல் வந்து முடிந்தது..அது அன்று 8450 வரை சென்று இருந்தால் கூட முடியும் போது 8400 இல் தான் முடிந்திருக்கும்...அது தான் திட்டமிடப்பட்டு அது தான் நடந்தது..இங்கே ஒரு வேளை வியாபாரம் நடந்திருந்தால் ஒரு 10 புள்ளிகள் அதிகமாகவோ குறைவாகவோ மார்க்கெட் முடிந்திருக்கலாமே ???? கடைசி 20 நிமிடமும் இப்படி தான் TRADE ஆகியது...இப்படி தான் இங்கே எல்லாமுமே...


இன்னும் நிறைய நிறைய இருக்கிறது உதாரணங்கள் ..அதை எழுத்தில் விளக்க முடியாது..எழுதினால் இன்னும் 200 பக்கம் எழுத வேண்டியது இருக்கும்..


இங்கே தொழில் என்ற மரியாதையோடு ..கவனமாக இருந்தால் பணம் சம்பாதிக்க முடியும் ..அதுவும் உங்கள் முதலீடிற்கு ஏற்ற வருமானம் மட்டுமே...மற்ற படி இங்கே இதை விட நல்ல தொழில்களும் உள்ளன..பங்கு சந்தையில் உள்ள 4000 COMPANY களும் 4000 தொழிலை தான் செய்கின்றன ..இந்த COMPANY கள் இங்கு வந்து அவர்கள் SHARE ஐ பட்டியலிட்டு இருகின்றன..அவ்வளவு தான் அவர்கள் வேறு தொழிலை தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள் .. எல்லோரும் இங்கே TRADE  செய்யவில்லை...                                                                    


 இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் ...உங்களால் இந்த பங்குசந்தையில் ஜெயிக்க முடியுமா..???..கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் இங்கே இருங்கள்.. இல்லை என்றால் ...நாளையே உங்கள் ACCOUNT இல் இருக்கும் மீதமுள்ள பணத்தையாவது PAYOUT போட்டு அதை எடுத்து முழுமையாக உங்கள் குடும்பத்தினருடன் அனுபவித்து செலவழியுங்கள் ....அதன் பின் வேறு தொழிலுக்கு மாறி விடுங்கள்...எல்லா தொழிலிலும்   பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன...


நீங்கள்  தான் கற்று கொள்ளவும் பொறுமை மனது இல்லாமல் 20000,30000 என்று எங்குகெங்கோ உழைத்து இங்கு வந்து தொலைத்து  கொண்டு இருக்கிறார்கள்..


உங்களுக்கும் எனக்கும்உள்ள ஒரே ஒரு உறவு  FACEBOOK ம் தமிழும் மட்டுமே... என்  தமிழ் சகோதரர் ஒருவர் கூட தம் பணத்தை இழந்து விட கூடாது என்பதற்காக தான் இந்த கட்டுரை ..தவிர இந்த தொழில் மீதான உங்கள் நம்பிக்கையை குறைப்பதற்காக இல்லை...


தோழமையுடன்

ZFORMULA RAVI